தென்காசியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

Update: 2021-01-25 06:36 GMT

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.பேரணியின் போது, வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News