ரயில் முன்பதிவு மையம் இயங்காததால் பயணிகள் அவதி

Update: 2021-01-20 11:30 GMT

தென்காசி மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

பாவூர்சத்திரம் மற்றும் கீழ கடையம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது மேட்டூர் ரயில் நிலையம். மேட்டூர், அரியப்பபுரம், ஆவுடையானூர், புலவனூர், மயிலப்பபுரம் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இந்த ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பி.எஸ்.என்.எல் இணைப்பில் பிரச்சனை காரணமாக தட்கல் முறையில் ரயில் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், பிஎஸ்என்எல் இணைப்பில் பிரச்சனை உள்ளதால் தட்கல் முறையில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் திருநெல்வேலி எம்பிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்து, இந்த தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு முறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News