சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-06-24 09:29 GMT

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி கவியரசு கண்ணதாசன் நினைவிடத்தில் கண்ணதாசன் இலக்கிய பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இணைச்செயலாளர் சிவல்புரி சிங்காரம் முன்னிலை வகித்தார். மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா ஆகியவற்றை கவியரசு கண்ணதாசனின் 94 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கினர்.

நிகழ்ச்சியில் கீழச்சிவல்பட்டி செல்வமணி, பன்னீர்செல்வம், குணாளன், குமார், திருஞான சம்பந்தம், சீனிவாசன், பிரசாந்த், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News