ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை; டிஐஜி துவக்கிவைப்பு

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை டிஐஜி தொடக்கி வைத்தார்.

Update: 2021-07-31 08:25 GMT

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த ராமநாதபுரம் சரக டிஐஜி.

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் சார்பில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா.ராமநாதபுரம் சரக டிஐஜி தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுற்றுவட்டார மக்களின் நலன் கருதி  'காரைக்குடி ஊற்றுகள்' என்ற சமூக அமைப்பின் சார்பில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா இன்று நடைபெற்றது.

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை, 24 மணி நேரமும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆம்புலன்ஸ் வசதி வேண்டுவோர் 9443108108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன் பங்கேற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News