சிவகங்கை: பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
சிவகங்கையில், பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை முக்கு நெல்மண்டி தெருவில் வசித்து வரும் முத்துபாண்டி இவர், பாஜக மீனவர் அணி துணைத் தலைவராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், நேற்று மாலை, அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தேடிச்சென்ற மூன்று நபர்கள், அவர் வீட்டில் இல்லாததால் அங்கிருந்த காரை அடித்து உடைத்தனர்.
பின்னர், வீட்டு அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த முத்துபாண்டியை, மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல், அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுஅங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் முத்து பாண்டியை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார்.
முத்துப்பாண்டியன் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால், அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முத்துப்பாண்டியன் உடல், உடற்கூறு ஆய்வுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து சிவகங்கை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம், சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.