பைக்மீது லாரி மோதிய விபத்து: வாலிபர் பலி.

வாலாஜாப்பேட்டை அருகே முன்னால் சென்ற பைக் மீது டிப்பர் லாரி மோதி கீழே விழுந்த வாலிபர் லாரி டயரில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-11-26 06:02 GMT

மாதிரி படம் 

வாலாஜாபேட்டையில் வீட்டு வசதி வாரியத்தைச்சேர்ந்த சமீர்( 18), ,பொதிகை நகர்,விக்னேஷ்(20) மற்றும் அஸ்வின்(19 ) நண்பர்களான மூவரில் சமீர்,விக்னேஷ் ஒரு பைக்கிலும் அஸ்வின் மற்றொரு பைக்கில் வாலாஜா அடுத்த முசிறி ரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, முசிறி ரோட்டில்  தனியார் கம்பெனி அருகில் வந்துகொண்டிருந்த அவர்கள் பைக்குகள் மீது பின்னால் வேகமாக வந்த   டிப்பர் லாரி  மோதியது. அதில் நிலை தடுமாறிய வாலிபர்கள்  சாலையில் விழுந்தனர்.

அதில் சமீர், துரதிர்ஷ்டவசமாக லாரியின் இடதுபுறம் முன்,பின் இருசக்கரங்களுக்கிடையே விழுந்தார். இதனை கவனிக்காத  லாரிடிரைவர் லாரியை எடுத்துள்ளார். அப்போது விழுந்து கிடந்த சமீர் மீது  லாரியின் பின் சக்கரம்  ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

விபத்து குறித்து தகவலறிந்து வந்த வாலாஜா போலீஸார் சமீரின் உடலைபிரேதப் பரிசோதனைக்கு வாலாஜா மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர் . பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிந்து லாரிடிரைவரைக்கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

Tags:    

Similar News