ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேர்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேரை பாலமுருகனடிமை சுவாமிகள் பார்வையிட்டார்

Update: 2021-09-01 17:55 GMT

ரத்னகிரி முருகன் கோவிலில் உருவாகும் மரத்தேர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. கோயிலின் பரம்பரை அறங்காவலாராக பாலமுருகனடிமை சுவாமிகள் இருந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார்.

அதில், தற்போது கோயிலுக்கு ரூ 60 லட்சம் மதிப்பில் 36 அடி உயரத்தில் மரத்தேரை உருவாக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாலமுருகனடிமை சுவாமிகள் தேர் உருவாகும் பணியை பார்வையிட்டு விரைவில் தேரை வடிமைத்து  தரும்படி பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்..

Tags:    

Similar News