வாலாஜா அருகே மின்கம்பத்தில் வேன்மோதி கவிழ்ந்தது. பெண்கள் 16 பேர் உயிர் தப்பினர்

வாலாஜாப்பேட்டை அருகே மின்கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்ததில், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் பெண்கள் 16 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

Update: 2021-07-13 13:14 GMT

வாலாஜா அருகே மின்கம்பத்தில் வேன்மோதி கவிழ்ந்தது. 

வாலாஜாப்பேட்டை அருகே உள்ள அனந்தலை ஜெபிநகர் பகுதி பெண்கள் வேன் மூலமாக வேலைக்கு இராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் கம்பெனிக்கு சென்று வருகின்றனர். அதன்படி காலை வழக்கம்போல பெண்கள் வேனில் அனந்தலையிலிருந்து இராணிப்பேட்டை நோக்கி  சென்று கொண்டிருந்தனர் .

வேனை சரத் என்பவர் ஓட்டி வந்தார். அனந்தலை திருப்பத்தில் திரும்பிய போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வயலோரமிருந்த மின் கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்தது,

அதே நேரத்தில், விபத்து காரணமாக மின் கம்பமும் ஓடிந்து விழுந்தது . அப்போது சம்பவத்தைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனே ஓடிச்சென்று மின் இணைப்பைத் துண்டித்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு வேனில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இவ்விபத்து குறித்து வாலாஜாப்போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News