வாலாஜா ஒன்றியம் 4வது வார்டில் மும்முனை போட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.
இதில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஜோதி, திமுக சார்பில் துளசி, பாமக சார்பில் பாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மும்முனைப்போட்டி என்பதால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது