எரிசாராயம் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்த போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு
கலவையில் லோடு வேனில் எரிசாராயத்தை கடத்திச் சென்ற போது மடக்கி பிடித்த போலீஸாருக்கு இராணிப்பேட்டை எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் கலவை அடுத்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் கடத்திவரப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவுள்ள 100 கேன்களில் 3,500 லிட்டர் அளவிற்கு எரிசாராயத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
சிறப்பான பணியை மேற்கொண்ட கலவை சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி, தலைமை காவலர் மணி மற்றும் முதல்நிலை காவலர் குமரன் ஆகியோருக்கு இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்.