இராணிப்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்
இராணிப்பேட்டை சீக்கராஜபுரம்அருகே வாழ்வாதாரம் இழந்த பார்வையற்றவர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்களை சமூக ஆர்வலர் நல்லசாமி வழங்கினார்
இராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி. தொழிலதிபரான இவர் தன்னார்வலராக இருந்து பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.
தற்போதைய கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரமின்றி தவித்துவரும் திருநங்கைகள், கோயில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பல லட்சம் ரூபாய்க்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளார். மேலும் தினசரி உணவுகளைத் தயாரித்து சாலையோரமாக உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சீக்கராஜபுரம், அதனையொட்டியுள்ள ஆரிய மோட்டூர் பகுதிகளில் வசித்து வரும் வருமானமின்றி கஷ்டப்பட்டு வரும் கண்பார்வை இல்லாதவர்கள் 100 பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை தொழிலதிபர் நல்லசாமி வழங்கினார்.