இரத்தினகிரி அருகே காரில் மணல் கடத்தல்..! - 3 பேர் கைது

இரத்தினகிரியருகே பாலாற்றிலிருந்து ஆம்னி காரில் மணல் மூட்டைகளை கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2021-06-18 12:34 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் இரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் பாலாற்றங்கரை சுடுகாடு பகுதி வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிரே வந்த ஆம்னி காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தனர் அதில் போலீசாரைப் பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்து 3 பேர் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் 3 பேரையும் மடக்கி பிடித்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் அருகிலுள்ள ஆற்றிலிருந்து மணலை மூட்டைகளாகக் கட்டி காரில் பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் தப்பி ஓட முயன்றவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் அவர்கள் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் தினேஷ்குமார் (27), அஜீத்குமார்(23), மற்றும் கீழ்மின்னலை சேர்ந்த தர்மன்(எ) சூர்யா(20) என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 3பேரையும் கைது செய்த இரத்தினகிரி போலீஸார் கார் மற்றும் மணல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News