இராணிப்பேட்டையில் மழை சேத பாதிப்புகள் குறித்த ஆய்வுகூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில் மழை சேத பாதிப்புகள் ஆய்வுகூட்டம் நடந்தது.

Update: 2021-11-29 11:28 GMT

மழை சேதம் குறித்த ஆய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மழை சேத கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில் மழைவெள்ள சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது . கூட்டத்தில்  மழைச்சேதங்கள் குறித்து விபரங்கள் இடிபாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும்,  பாதிப்படைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு   அளிக்கப்பட்டு வரும் நிவாரணங்கள்  மற்றும் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் , திட்டஇயக்குநர் ஊரக முகமை லோகநாயகி மற்றும் அனைத்து அலுவலர்கள் கலத்து கொண்டனர்.

Tags:    

Similar News