இராணிப்பேட்டை மாவட்டதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா நிதி வழங்கியது

இராணிப்பேட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியினர் சார்பில் கொரோனா நிதியாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை வழங்கினர்.

Update: 2021-06-21 15:13 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலினின் கொரோனா நிதி கோரி விடுத்த வேண்டுகோளின்படி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொரோனா நிவாரண நிதி 1கோடி ரூபாய் வழங்குவதாக  சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து18 ஆயிரம், நெமிலி ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து 5ஆயிரம், அரக்கோணம் ஒன்றியத்தில் ரூ.60 ஆயிரத்து 500, சோளிங்கர் ஒன்றியத்தில் ரூ. 26 ஆயிரத்து 500 ஆகியவை சேர்த்து மொத்தம் 3லட்சத்து 10ஆயிரத்தை வசூல் செய்து இராணிப்பேட்டை மாவட்டத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நிதியாக மின்னணு பரிவர்த்தனையின் மூலம் செலுத்தினர் 

Tags:    

Similar News