இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழப்பு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
இராணிப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழைப் பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் கரைபுரன்டு சென்று கொண்டிருக்கிறது. மேலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதனால், தாழ்வானப்பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மாவட்டம் முழுவதும் மழையால் சுமார், 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்கள், 1373பேர் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 6,பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.