மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழா: புதுமண ஜோடிக்கு கலெக்டர் வாழ்த்து

மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழாவில் திருமண ஜோடிக்கு கலெக்டர் வாழ்த்துக்கூறினார்

Update: 2022-01-07 12:45 GMT

மாற்றுதிறனாளிகள் பொங்கல் விழாவில் ஜோடிக்கு திருமணம் கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் குடும்ப பொங்கல் விழாவில் கலெக்டர் மாற்றுத்திறனாளி ஜோடியினரின் திருமணத்தை நடத்தி வாழ்த்தினார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப பொங்கல் விழாவினை    கொண்டாடினர்

விழாவில் ,ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியைச்  சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் திருச்சி மாவட்டம் மலையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிஅம்மாள் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தாலியை மணமகன்  கையில்  கொடுத்ததையடுத்து  மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.பின்பு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகள்ம்பதியினரை வாழ்த்தினர்


Tags:    

Similar News