இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2021-09-30 10:15 GMT

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி,  முத்துக்கடை பஸ்நிலையத்தில் இருந்து மாவட்ட எஸ்பி தீபாசத்தியன், போலீஸ் கொடி அணிவகுப்பை நடத்தினார்.

தமிழகத்தில்,  இராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில்,  ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும் 6மற்றும் 9ந்தேதிகளில் நடக்க உள்ளது. அதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்க உள்ள தேர்தலில் , மக்கள் எந்தவித அச்சமுமின்றி 100சதவீத வாக்குகளிக்க  ஏதுவாக, மாவட்ட காவல்துறை சார்பில் கொடிஅணிவகுப்பு நடந்தது.

இந்த அணி வகுப்பானது, மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் தலைமையில்,  டிஎஸ்பி பிரபு, பயிற்சி டிஎஸ்பி தனுஷியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, காண்டீபன், முகேஷ்குமார், மங்கையர்கரசி மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்புடன் நடைபெற்றது. முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தொடங்கி, நவல்பூர் வழியாக முக்கியவீதிகளில் சென்று,  இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அணிவகுப்பு நிறைவடைந்தது.

Tags:    

Similar News