சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு

Update: 2021-07-29 11:11 GMT

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் பொதுமக்களிடம் சிலிண்டர்களை விநியோகிக்கும் போது அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு  வசூலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (அ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை தெரிவிக்கலாம்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி செவ்வாய்கிழமைகளில் மாலை4மணிக்கு நடக்கும் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News