பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர்: அமைச்சர் காந்தி வழங்கினார்
வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சர் காந்தி பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேருத்து நிலையம் அருகே இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா தடுப்பு மருந்தாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது
.நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கித் துவக்கி வைத்தார் .
பின்பு, வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.