வாலாஜாமருத்துவ மனைக்கு கட்டில் மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு 20 கட்டில் மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

Update: 2021-06-12 10:03 GMT

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு 20 கட்டில் மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  கட்டில்,மெத்தைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.    நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் அக்ராவரம்  பாஸ்கர் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 20 கட்டில்கள் மற்றும்  மெத்தைகளை மருத்துவமனை அலுவலரிடம் வழங்கினார்.

பின்னர்  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரே வழி தடுப்புசி தான். மருத்துவமனை நிர்வாகத்தினர் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.  மேலும்  பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன் வரவேண்டும் என்று அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மருத்துவமனை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.....

Tags:    

Similar News