வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்

வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

Update: 2021-07-31 15:29 GMT

வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியார்  நிறுவனம் சார்பில் 45லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலைய தொடக்க விழா நடந்தது.

விழாவில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளரான அமைச்சர் ஆர்.காந்தி  குத்துவிளக்கேற்றி ஆக்ஸிஜன் உற்பத்தியினை துவக்கி வைத்தார்.

பின்னர் ,அவர் விழாவில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள்   தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் அச்சம் படவேண்டியதில்லை. திட்டங்களை செயல்படுத்திவதில் மாநிலம் முன் மாதிரியாக செயல்படுகிறது என்று பேசினார்.

விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி முதன்மை மருத்துவர்  மருத்துவர்கள் ,பணியாளரகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News