இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2021-10-22 05:35 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கடந்த 20ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்து வருகிறது. அதில் இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 13 பேரில் தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது. அதில் ,9வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயந்திதிருமூர்த்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்  ஜெயந்தி  தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாட்டியன் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதன்பேரில்  இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிதலைவராக   ஜெயந்தி பதவியேற்றுக் கொண்டார்.  அப்போது மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் உடன் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News