இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டையில் ₹25லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கொரோனா உபகரணங்களை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வழங்கியது.

Update: 2021-08-20 13:51 GMT

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கொரோனா உபகரணங்களை கலெக்டரிடம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வழங்கியது

இராணிப்பேட்டையில் ₹25லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செரியூட்டிகள் உள்ளிட்டகொரோனா உபகரனங்களை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் ₹25லட்சம் மதிப்பில் 14,ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்,1 வென்டிலேட்டர் மற்றும் கொரோனா தொற்றைத்   தடுக்கும் முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் ,சோப்புகள் ஆகியவற்றை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கினர்.  அவைகளை, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அரக்கோணம் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களுக்கு வழங்கினார்.

மேலும்  ஆற்காட்டில் உள்ள   மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின்  அலுவலகத்தில் 5ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மூலம் ஆக்ஸிஜனை வங்கியில் சேகரிக்கப்பட்டு அவசரக்காலத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது துணைசுகாதார இயக்குநர் மணிமாறன்,ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் தலைவர் ரகுநாதன் ,முணைத்தலைவர் லட்சுமணன்மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News