ராணிப்பேட்டையில் இலவச தையல் மிஷின் தருவதாக மோசடி

இராணிப்பேட்டையில் பெண்களிடம் இலவச தையல் மிஷின் பெற்று தருவதாக பணம் வாங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2021-06-29 05:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்து  சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மீரா, நவல்பூர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை எடுத்து அன்னை மாதா இலவச தையல் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார். அதில் பயிற்சி பெறுவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தையல் பயிற்சி பெற்று வந்துள்ளனர்

இந்நிலையில் தையல் பயிற்சி பெற்று வந்துள்ள பெண்களிடம் மீரா, பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க ஒருத்தருக்கு ரூ.300 என 60க்கும் மேற்பட்டோரிடம் வசூல் செய்துள்ளார்

மேலும் அவர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறும் பொழுது அவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதாகக் கூறி அனைவரிடமிருந்து தலா 2ஆயிரம் வசூல் செய்துள்ளார்

ஆனால் இதுவரை தையல் மிஷனை பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து தையல்மிஷனுக்காக பணம் தந்தவர்கள் அனைவரும். மீராவிடம் 2ஆயிரத்தை திருப்பிகேட்டு வந்துள்ளனர் ஆனால் மீரா ஏமாற்றி வந்த நிலையில், அவரை பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸில் புகார் அளிக்கப்போவதாக மீரா மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதைக்கேட்டு அதிர்ச்சியில் பெண்கள் பணமோசடி செய்து மிரட்டி வரும் மீரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Tags:    

Similar News