இராணிப்பேட்டை பெல் வேங்கடாசலபதி கோயிலில் சிரவண மாத சஹஸ்ரநாம அர்ச்சனை.
இராணிப்பேட்டை அருகே உள்ள பெல் ஊரகத்தில் உள்ள வேங்கடாஜலபதி கோயிலில் சிரவண மாத சஹஸ்நாமார்ச்சனை நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் ஊரகத்தில் வேங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர நாளில் மூலவரான பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் விசேஷித்த பூஜைகள் ஆகியவை நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், சிறப்பான சிரவணமாத திருவோண நட்சத்திரதினத்தில் காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் வேதபாராயன நிகழ்ச்சி நடந்து மாலை மூலவர்மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்து அருள்பாலித்தனர்
அப்போது,கோயில் பட்டாச்சாரியர்கள் விஷ்ணு அஷ்டோத்திரம்,சஹஸ்ரநாம அர்ச்சனைகள் செய்தனர். நிகழ்ச்சியில், பெல் ஊரகப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் .
பின்னர், அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினர். நிகழ்ச்சிகான ஏற்பாடு களை ஆலய கமிட்டியினர் செய்தனர்.