ஆற்று வெள்ளத்தில் பரிதவித்த மாடுகள் மீட்பு .
இராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்னு அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த மாடுகளை தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டனர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் தொடர்மழை காரணமாக கடந்த சில நாட்களாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை அதில் ஆற்காடு அடுத்த விஷாரத்தைச்சேர்ந்த ஏழுமலை,ராஜா ஆகியோரது மாடுமற்றும் கன்று வெள்ளத்தில் அடித்து அடித்துச் செல்லப்பட.டது.
அவை அதிர்ஷ்டவசமாக புளியங்கன்னு அருகே பாலாற்றில் உள்ள மணல் திட்டில் ஏறி உயிர்தப்பி அங்கேயே அச்சத்தில் உணவின்றி பரிதவித்து வந்துள்ளன.
இதனைக்கண்ட அப்பகுதியினர் உடனே இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினர்,மற்றும் சிப்காட் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மீட்புப்படையினர் ஆற்றில் ரப்பர்படகுமூலம் சென்று பரிதவித்து வந்த மாடுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்