முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி:அமைச்சர் காந்தி துவக்கி வைப்பு

இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார

Update: 2022-01-11 05:00 GMT

பூஸ்டர் தடுப்பூசி போடுவதை துவக்கி வைத்த அமைச்சர் காந்தி 

இராணிப்பேட்டை நகராட.சி அலுவலக வளாகத்தில் முன்களப் பணியாளர்களான  துப்புரவு மற்றும் சுகாதாரத் துறைப்  பணியாளர்களுக்கு கொரோனா  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியின் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட, சுகாதாரத்துணை இயக்குநர் மணிமாறன் ,நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்,மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News