ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-11-18 13:53 GMT

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள பாலாற்றில்  தற்போது பெய்து வரும்  வடகிழக்கு பருவ மழையின் காரணமாக   வினாடிக்கு சுமார் 20000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தியில்,  பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான

1.அரப்பாக்கம்

2.கீழ்மின்னல்

3.பூட்டுத்தாக்கு

4.நந்தியாலம்

5.விசாரம் (சாதிக் பாஷா நகர்)

6.வேப்பூர்

7.காரை

8.பிஞ்சி

9.திருமலைச்சேரி,

10.பூண்டி

11.குடிமல்லூர்

12.சாத்தம்பாக்கம்

13.கட்பேரி

14.திருப்பாற்கடல்

15.ஆற்காடு

16.சக்கரமல்லூர்

17.புதுப்பாடி

ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பதாகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம். என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் ,  ஆற்றங்கரையோரம் வேடிக்கை பார்க்கவோ,கரைகளைக் கடக்க  யாரும் முற்பட வேண்டாம்  மேலும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று  இ  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News