லாரி ஒப்பந்ததாரரை மிரட்டியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

வாலாஜா சிவில் சப்ளை குடோன் லாரி ஒப்பந்ததாரரை மிரட்டியதாக திமுக நகர துணை செயலாளர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்

Update: 2021-08-01 14:09 GMT

வாலாஜா திமுக நகர துணை செயலாளர்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலூக்காவிற்குட்பட்ட ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் தமிழ்நாடு சிவில் சப்ளை குடோன் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு ரோடில் இயங்கி வருகிறது .

குடோனிலிருந்து அரிசி,சர்க்கரை மற்றும் உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய, நிர்வாகம் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில்  செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு  நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரராக  கனி என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நகர துணை செயலாளரான குமார்,   குடோனில் ஒப்பந்தப் பணிகள் செய்யக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும், தாக்கியதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குமார் மீது வாலாஜாப்பேட்டை போலீஸில் கனி புகார் செய்துள்ளார்.

புகாரைத்தொடர்ந்து போலீஸார் குமார்மீது வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர். 

Tags:    

Similar News