இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமனம்
இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமித்து தமிழக தலைமை செயலர் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம்,வேலூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல்கலெக்டராக திவ்யதர்ஷினி இருந்து வந்தார். பின்னர் அவர் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார் அவரைத் தொடர்ந்து கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலெக்டராக இருந்த நிலையில் அவர் மாநில திட்டஆணைய உறுப்பினர் செயலாரக இடமாற்றம் செய்யப்பட்டார்
இதனையடுத்து ,தற்போது இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்..