இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள் வரவேற்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2021-06-23 09:06 GMT

தமிழகத்தில் ஆண்டு தோறும் நடக்கும் சுதந்திர தின விழாவில் உயிரைத் துச்சமாக நினைத்து புத்தி சாதுர்யமாக ஆபத்தில் இருந்தவர்களை காப்பாற்றி அனைவரது பாராட்டுக்களை பெற்ற வீராங்கனைகளுக்கு, மறைந்த சாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா நினைவாக விருதினை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோட்டையில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வரால் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதன் பேரில் இந்த ஆண்டிற்கான விருதினைப்பெற இராணிப்பேட்டை மாவட்டத்தில்வீரதீர செயல் புரிந்த  வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அதற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gbv.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து,

மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

நேதாஜி விளையாட்டு அரங்கம் ,

வேலூர் .

என்ற முகவரிக்கு  25.6.2021 க்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News