15,000 கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தர மத்தியஅரசு மறுக்கிறது: உதயநிதி

Update: 2021-03-16 17:08 GMT

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான காந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்த கோபத்தில் தான் மத்திய அரசு நிலுவையில் உள்ள 15,000 கோடி ஜி.எஸ்.டி.நிலுவைத்தொகையை தர மத்திய அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே போடப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார்.

Tags:    

Similar News