காவல் நிலையத்திற்கு ISO 9001 தரச்சான்று

ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு ISO 9001 தரச்சான்று வழங்கப்பட்டது .

Update: 2021-02-18 11:02 GMT

ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தூய்மை நூலகம் பூங்கா அமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் ஆகியவைக்கான ISO 9001 தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ் குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன்,  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், பூரணி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இதில் கல்லூரி மாணவிகள் 6 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து சாலை விதிகளைப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News