ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக சிவகுமார் பதவியேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது புதிய எஸ்பியாக டாக்டர் சிவகுமார் பதவியேற்றார். முன்னதாக முன்னாள் ராணிப்பேட்டை எஸ்பி.,மயில்வாகனம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். அதைத்தொடர்ந்து எஸ்பி சிவகுமார் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் குற்றச் செயல்களும் நடைபெறாத அளவிற்கு விழிப்புடன் செயல்படுவது எனது முதல் பணி என்றார்.