மறைந்த நடிகர் விவேக்கிற்கு மரக்கன்றுகளை நட்டு இளைஞர்கள் அஞ்சலி.
நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இளைஞர்கள் குழுவினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் "நம்மால் முடியும் இளைஞர்கள்" இணைந்து அவ்வூரில் உள்ள முக்கிய இடங்களில் வேம்பு, பூவரசு, புங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மரகன்றுகளை நட்டு வைத்தனர்.