பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-07 15:36 GMT

பெரம்பலூரில் கொள்ளையர்களிடம் நகையை பறி கொடுத்த கலையரசி

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி வயது - 41 இவரது கணவர் அசோகன் -இவர்கள் தற்போது பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அருணசல கவுண்டர் நகர், பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கலையரசி இன்று வேலை நிமித்தமாக தனது இருசக்கர  வாகனத்தில் எசனை கிராமத்திற்குச் சென்று விட்டு, மாலையில் மீண்டும் பெரம்பலூருக்கு புறவழி சாலையில் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கலையரசி கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி பறித்துள்ளார்.

இதில் சங்கிலியை கலையரசி கையில் பிடித்துக் கொண்டதால், செயின் உடன் இருந்த ஒரு பவுன் எடை கொண்ட திருமாங்கல்யம்  தவிர மற்ற 5 பவுன் தங்க செயினை பறிபோனது.

இச்சம்பவம் குறித்து கலையரசி பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள -சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு  தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News