பெரம்பலூர்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பலூரில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-21 16:03 GMT
விபத்து ஏற்படுத்திய பஸ்

பெரம்பலூர் மாவட்டம் காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். அறுபது வயதான இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து- பொன்னகரம் செல்லும் நகர பேருந்தில்   படிக்கட்டில் அருகே உள்ள சீட்டில் அமர்ந்து பய செய்துள்ளார்.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருக்கையில் அமர்ந்து இருந்த பேச்சியம்மாள் படிக்கட்டின் வழியாக தலைகுப்புற தரையில் விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த ,விபத்து குறித்து  ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News