சினிமா பாடல் பாணியில் போட்டோ அனுப்பிய கணவன் மீது மனைவி கலெக்டரிடம் புகார்

பெரம்பலூரில் சினிமா பாடல் பாணியில் போட்டோ அனுப்பிய கணவன் மீது மனைவி கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

Update: 2021-10-18 16:20 GMT

கணவன் மீது புகார் கொடுப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கௌசல்யா.

பெரம்பலூர் மாவட்டம் எசனை ஊராட்சியில் உள்ள பாபங்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கலியமூர்த்தி. இவரது மனைவி ஜோதி. இவர்களின் இரண்டாவது பெண் கௌசல்யா, வயது 20, இவருக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு. நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி தெப்பக்குள காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் 35 என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கு உலிபுரத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது கௌசல்யாவிற்கு தெரியவந்தது இதுகுறித்து அவர் கேட்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார், இதனால் மனமுடைந்த கௌசல்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் கௌசல்யா தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இது தொடர் உறவினர்கள் ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது நான் அப்படி தான் இருப்பேன் என்று கூறியதாக தெரியவருகிறது மேலும், கௌசல்யாவின் செல்போன் எண்ணுக்கு திரிஷா இல்லை என்றால் திவ்யா என்ற பாணியில் உலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா என்ற பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை அனுப்பி உள்ளார் ரஞ்சித்குமார்.

இதனால் மனமுடைந்த கௌசல்யா இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார், நடவடிக்கை இல்லை என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அங்கு மீண்டும் மகளிர் காவல் நிலையத்தில் புகார்கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மகளிர் காவல் நிலையம் சென்ற போது உங்கள் பிரச்சனைக்கு சமூகநலத்துறையிடம் கொடுங்கள் என்று தெரிவித்தனர். இதனால் அங்கும் இங்குமாக அலைக்கழிக்க பட்ட கவுசல்யா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஒரு மாத கை குழந்தையுடன் வந்து மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தன்னை ஏமாற்றிய ரஞ்சித்குமார் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News