கணவனை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி

நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்ட கணவனை ஆத்திரமடைந்த மனைவி உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-19 16:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தொண்டாப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(49). இவருக்கு அம்சவள்ளி(25) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி அம்சவள்ளி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த ராமமூர்த்தி அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும்,நேற்று மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக தெரிகிறது.தொடர்ந்து சண்டைபோட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அம்சவள்ளி இன்று காலை கணவர் ராமமூர்த்தியை உலக்கையால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தகவல் தெரிந்த வி.களத்தூர் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதணைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவ்வாறு நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவி உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News