பெரம்பலூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல்.

தேர்தல் சூடு தணிந்துள்ள நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க பெரம்பலூரில் விஜய் ரசிகர்கள் தண்ணீர் பந்தல்.

Update: 2021-04-11 06:30 GMT

ஆண்டு தோறும் கோடையில் நடைபெறும் திருவிழாக்களில் நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். அங்கெல்லாம் தன்னார்வலர்களும் கட்சி சார்ந்தவர்களும் தண்ணீர் பந்தல்கள் வைப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் வெளியே வர வாய்ப்புகள் குறைவு என்பதால் தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை. அதே போல் இந்த ஆண்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினால் கட்சியினர் யாரும் தண்ணீர் பந்தல் அமைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

கோடைக்காலம் நெருங்கும் முன்பாகவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அனல் பறக்க தொடங்கியது. இதனால் மக்கள் வெளியில் செல்லும்போது தாகம் தணிக்க தேனீர் விடுதி, குளிர்பான கடைகளை நாடினர். இதனால் எழை எளிய மற்றும் கூலித்தொழிலாளிகள் அல்லல்பட்டு வந்த நிலையில் பெரம்பலூரில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிதாக தண்ணீர் பந்தல் அமைத்து பொதுக்களுக்கு தண்ணீர், நீர் மோர், குளிர்பானம், எலுமிச்சை சாறு , தர்பூசணி பழம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

தேர்தல் முடிந்ததால் பொதுமக்களை கவர்ந்து காரியம் ஏதும் ஆகாது என்பதால் கட்சியினர் யாரும் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க அக்கறை காட்டாத நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார்கள் பெரம்பலூர் பொதுமக்கள்.

Tags:    

Similar News