தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், பாடாலூரில் நடைபெற்றது.

Update: 2021-10-09 14:00 GMT

பாடாலூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜா வரவேற்புரை நல்கினார்.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 84 நபர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கிய தமிழக முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,  மாநில நிர்வாகக்குழு செயலாளர் சுரேஷ், மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம், உதவி தேர்தல் ஆணையர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News