கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
2021ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் வழங்கவுள்ளார்
தமிழ்நாட்டை பூவீகமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளதால், தகுதி வாய்ந்த பெண்கள் தங்களது தகுதி குறித்த கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க்வேண்டும்.
இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 05.08.2021 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இறுதி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-296209, 04328-224122 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தகவல் தெரிவித்துள்ளார்.