பெரம்பலூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது, மாட்டு வண்டி பறிமுதல்
பெரம்பலூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்கபுரம் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்றனர்.
மாட்டுவண்டியில் மணல் ஏற்றிச் சென்ற அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பெருமாண்டி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் , .சிற்றரசு ,பாபு ஆகிய மூவரையும் மாட்டு வண்டியுடன் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 3 மாட்டு வண்டிகள் மற்றும் ரூபாய் 3000 மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்தும் மேற்படி எதிரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி குன்னம் காவல் ஆய்வாளர் ரவீந்திரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.