பெரம்பலூரில் தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் , ஊதியம் கேட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-14 09:35 GMT

பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த  கல்லூரியில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக அலுவலக பணியாளர்களாக  80 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி இன்று பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிகள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி முழக்கம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News