பெரம்பலூர்: கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயற்சி- வாலிபர் பிடிபட்டார்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்றவரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.

Update: 2021-09-23 07:15 GMT

வி களத்தூரில் கோயில்  தேரை தீ வைத்து கொளுத்த முயன்றதாக பிடிபட்ட வாலிபர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த காதர் ஷான் மகன் முஹமது ஷான் என்பவர் இந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து  வி. களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் சம்பந்தமாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன என்றும் இவருக்கு பின்புறம் யார் உள்ளனர் என விசாரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். இந்து -முஸ்லிம் இடையே வி.களத்தூர் கிராமத்தில் அடிக்கடி சச்சரவு ஏற்படும் நிலையில் இச்சம்பவம் இன்று நடந்து இருப்பது அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News