பெரம்பலூர்: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று லஞ்சஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ஹேமசந்திரா தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? ஊழியர் யாரும் கைது செய்யப்பட்டார்களா? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.