மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகள் சாதனை

சென்னையில் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-10-19 14:31 GMT
மாநில அளவிலாதன தடகள போட்டியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் சென்னையில் கடந்த 15 - ந்தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது . இந்த தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள் .

இதில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி விளையாட்டு விடுதி வீராங்கனையும் , பெரம்பலூர் அரசு உதவி பெறும் பள்ளியின் பிளஸ் -2 மாணவியுமான தன்யா 100 மீட்டர் தடை தாண்டுதல் , 200 மீட்டர் ஓட்டம் , 800 மீட்டர் ஓட்டம் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் , குண்டு எறிதல் , ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டி களை கொண்ட ஹெப்டத்லான் போட்டியில் 2 - ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி கிருத்திகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3 - ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார் . மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தன்யா , மற்றும் கிருத்திகா ஆகியோரை பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் .

Tags:    

Similar News