பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணி விற்பனை தேக்கத்தால் விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைந்த பூசணி காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2021-10-13 10:28 GMT

விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பூசணிக்காயுடன் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தையே முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.பெருவாரியான மானாவாரி நிலங்களில் பருத்தி ,மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் மழையை நம்பியே அதிகளவில் சாகுபடி செய்யப் படுகின்றன.

இதனிடையே நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழாவில் பொரி, பூசணி, பழ வகைகள், கலர் கொடி வகைகள், உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் கிராமத்தில் பூசணி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பூசணி காய்கள் பெருத்த காரணத்தால் விலை போக முடியாத நிலை உள்ளது. மேலும் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து விற்பனை செய்பவர்கள் வாங்கி செல்வதாகவும்., பெருமளவு , பூசணி தேக்கமடைந்ததாகவும் தாங்கள் செலவு செய்து விளைவித்தும் நல்ல விலைக்கு விற்பனை ஆகாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News