பெரம்பலூரில் பள்ளி வாகனங்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு .ஆய்வு செய்தனர்.

Update: 2021-09-28 10:04 GMT

பெரம்பலூர்  தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் இதனை மேற்பார்வையிட்டனர்.

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு சரிபார்த்தல் ,முதலதவி பெட்டி இருத்தல்,தீ தடுப்பு கருவிகள் வைத்தல் உள்ளிட்டவைகள் சரிபார்த்தல் உள்ளிட்ட ஆய்வு நடைபெற்றது .அனைத்து பரிசோதனைகளும் முடிவுற்ற பிறகு வாகனங்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

பள்ளி வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது..மாவட்டம் முழுவதும் 52 தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளிவாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News