சசிகலாவிற்கு பெரம்பலூரில் வரவேற்பு: அமமுகவினர் உற்சாகம்

சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலாவுக்கு, பெரம்பலூரில் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-10-26 08:00 GMT

பெரம்பலூரில், சசிகலாவை வரவேற்ற அமமுகவினர். 

சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரில் சென்ற சசிகலாவிற்கு,  பெரம்பலூர் 4 ரோடு பகுதியில்,  பெரம்பலூர் மாவட்ட அமமுக சார்பில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்க்கொத்து கொடுத்தும்,  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,

நிகழ்ச்சியின்போது அமமுக ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளவரசன், பொருளாளர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் மோகன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் கலைவாணன்  உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

Tags:    

Similar News